
யாழ். புத்தூர் வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னையா நாகமுத்து அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அரவணைத்த உம் பிரிவு அறிந்துள்ளம்
ஆறாத்துயரதனால் ஆறாய் கண்ணீர் பெருக
இனிய சொல், ஈகை, பண்பு என்று
அனைவரும் போற்றிட வாழ்ந்தீர்கள்
மற்றவர்க்கு உதவும் பண்பு கொண்டு
எல்லோரும் போற்றிட வாழ்ந்தீர்கள்
இறைவன் சன்நிதியின் அமைதியிலே
இனிமை காண இறையருள்
வேண்டி பிராத்திக்கின்றோம்
கண்கள் கலங்குகிறதே காற்று வீச மறுக்கிறதே
உம் மறைவுதனை எண்ணி- எம் நெஞ்சம்
வெடித்து விடும் போல் இருக்கிறதே
நேற்றுவரை வாழ்ந்த வாழ்க்கை- இன்று
பாரை விட்டு போனதேனோ!
கதறி அழும் உம் உறவுகளுக்கு
யார் இனி ஆறுதல் சொல்வார்கள்?
கவலைகள் தீர கண்திறந்து பாராயோ?
நெஞ்சமதில் நிலைத்து நின்று
எண்ணமதில் என்றும் நிலைத்து
வண்ண மலர் வாசமென
எம் மனங்களிலே வீசிநின்றீர்
கண்ணிமைக்கும் காலத்துள்
காலனுமைக் கவர்ந்து சென்ற
கொடுமையெண்ணிக் கலங்குகின்றோம்
மனம் வெதும்பி வாடுகின்றோம்.
எமது அன்புத் தெய்வம் இறையடி எய்திய செய்தி கேட்டு ஓடோடி வந்து துயரத்தில் பங்கு கொண்டு பல உதவிகள் புரிந்தோருக்கும், தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும், கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களுக்கும், இறுதி நிகழ்வில் அஞ்சலி செலுத்திய அன்பர்களுக்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அப்பப்பாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.??