யாழ். வண்ணார்பண்ணை கேசாவில் பிள்ளையார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Torcy ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை பத்மநாதர் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 04-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் 03:00 மணிவரை 28 Av. Jean Moulin, 77200 Torcy, France எனும் முகவரியில் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் மற்றும் மதிய போசன நிகழ்வும் நடைபெற இருப்பதால் மதிய போசன நிகழ்வில் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.