Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மலர்வு 23 MAR 1949
உதிர்வு 09 JAN 2025
திரு சின்னத்தம்பி செல்வரட்னம்
வயது 75
திரு சின்னத்தம்பி செல்வரட்னம் 1949 - 2025 இருபாலை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Saarbrücken ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி செல்வரட்னம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டி ஆத்ம சாந்திப் பிரார்த்தனை 09-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 11.00 மணியளவில் எமது இல்லத்தில் நடைபெற இருப்பதனால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அவரது ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

வீட்டு முகவரி:
ஆதித்தன் வளவு பழைய வீதி.
கோப்பாய் தெற்கு.
கோப்பாய்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 11 Jan, 2025