Clicky

12ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி புவனேசமூர்த்தி
அகில இலங்கை சமாதான நீதவான், ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர்- பனை அபிவிருத்திச் சபை, கலை ஒளி மன்றம் இணுவில் முன்நாள் செயலாளர்
உதிர்வு - 04 JUL 2014
அமரர் சின்னத்தம்பி புவனேசமூர்த்தி 2014 இணுவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், தாவடி வடக்கு துரை வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி புவனேசமூர்த்தி அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து..
இன்றுடன் 12 ஆண்டு முடிந்தாலும்!
 எமது குடும்பக்கோவிலின் குலவிளக்காய்!
எங்கள் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் உறுதுணையாய்!
 உற்றவர்க்கும், மற்றவர்க்கும் உறுதுணையாய்!

அன்புக்கும், பண்புக்கும் பொக்கிஷமாய்!
அன்பு நெஞ்சங்களில் அகலா இடம்பிடித்து!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து!
எம்மையும் வாழவைத்து!

வானுறையும் எமது தெய்வத்தின்
இனிய நினைவுகளை எங்களின்
உதிரங்களில் சுமந்த வண்ணம்
இம் மலரை உங்கள் பாதக்கமலங்களில்
அர்ப்பணிக்கின்றோம்!

இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்