Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி புவனேசமூர்த்தி
அகில இலங்கை சமாதான நீதவான், ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர்- பனை அபிவிருத்திச் சபை, கலை ஒளி மன்றம் இணுவில் முன்நாள் செயலாளர்
உதிர்வு - 04 JUL 2014
அமரர் சின்னத்தம்பி புவனேசமூர்த்தி 2014 இணுவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், தாவடி வடக்கு துரை வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி புவனேசமூர்த்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு பத்து ஆனால் என்ன
ஆயிரம் தான் கடந்து போனால் என்ன
அன்பான அப்பாவே உங்கள் மறைவால்-
நாம் வாடுவதை யார் எடுத்துரைப்பார்கள்..

உறுதுணையாய் நானிருக்க
உற்ற துணையாய் நீங்கள் இருக்க
யார் கண் பட்டதுவோ- என்னை
பரிதவிக்க விட்டு எங்கு சென்றீர் ஐயா!!!

ஒளிதரும் சூரியனாக இருள்
அகற்றும் சந்திரனாக
ஊர்போற்றும் நல்லவனாக
பார் போற்றும் வல்லவனாக
வாழ்வாங்கு வாழ்ந்து- எங்களை
வாழவைத்த தெய்வமே!!!!

நின் துணையின்றி நாம் தவிக்க
என்ன பாவம் செய்தோம் என்று
எம்மை தவிக்கவிட்டு சென்றீர்களோ?
மறந்திடுமோ நெஞ்சமது வாழ்நாளில்
ஓர்முறையேனும் உங்கள் திருமுகத்தை!!!!

நாங்கள் கலங்கி நின்றாலும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்!

உங்கள் பிரிவால் வாடும் உங்கள் குடும்பத்தினர்...

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices