35ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி ஆறுமுகம் நடராஜா
(S. A. நடராஜா)
முன்னாள் வர்த்தகர்- கொழும்பு
வயது 47
அமரர் சின்னத்தம்பி ஆறுமுகம் நடராஜா
1943 -
1991
காரைநகர் களபூமி, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். காரைநகர் களபூமி தன்னையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி ஆறுமுகம் நடராஜா அவர்களின் 35ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு 35அகன்றோடி மறைந்தாலும்
உங்கள் நினைவு என்றும் மறக்காது
காலம் கொண்டு சென்றதோ - உம்மை
தவிக்கும் உம் உறவுகளையும் தாண்டி...
சோக நெருப்பில் எமைதள்ளி
நீர் சென்ற இடம் தான் எதுவோ...?
ஆயிரமாயிரம் வினாக்கள்
விடைசொல்ல ஒரு நிமிடம் வாரீரோ...?
விளையாட்டாகினும் கூட
சில மணித்துளிகள்
விழி அசைக்க மாட்டீரோ...?
நீ தந்துவிட்டுப்போன காயம் தினம் தினம் எமை
கொல்வதால் மீண்டும் ஒரு முறை வந்து
உன் மூச்சினால் எமை உயிர்பித்துப் போ!
தேடுகின்றோம் தேம்பியே போகிறோம்
35 ஆண்டு மட்டுமல்ல
ஓராயிரம் ஆனாலும் ஓயாமல் நினைவலையாய்
மனதோடு கலந்திருப்பாய் நீயே!
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்