
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, லண்டன் Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னம்மா மாணிக்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் உயிரில் கலந்த தாயே!
எமைவிட்டு பிரிந்து
ஆண்டுகள் பத்து ஓடி மறைந்ததம்மா..!
நித்தம் எங்கள் கண்களுக்குள்
நிறைந்திருக்கும் எங்கள் அன்புத் தாயே
நினைவெல்லாம் உங்களைச்
சுமந்தல்லோ நிற்கின்றோம்
நிலவை சூரியனை ஒளிர்கின்ற
தாரகைகளை பார்க்கையிலே
அங்கே அம்மா உங்கள் முகம்தானே
பட்டொளியாய் தெரிகிறது
ஆண்டுகள் பல சென்றாலும் - எம்
மனதில் பசுமையாக துளிர் விட்டுக்
கொண்டேயிருக்கும் எம் தாயே
உம் பிரிவால் - மீளமுடியாமல்
நீரில்லா மீனைப் போல்
துடிக்கிறோம் -தாயே!
எங்கள் நினைவிலும் மறக்கமுடியவில்லை!
அம்மம்மா! உங்கள் இனிமையான நினைவுகளை
நினைக்கும் போது நிலைகுலையச் செய்யுதம்மா!
நேற்று போல் இருக்கிறது உங்கள் நெஞ்சகலா அந்நினைவு!
நெஞ்சம் பதைக்கிறது அந்நாளை நினைக்கையிலே
ஏன் எங்களை மறந்தாய் அம்மம்மா!
எங்கும் நிழலாய் பின்தொடர்ந்தாய்- இப்போது
பாதிவழி விட்டுவிட்டு பரலோகம் சென்றதுமேன்?
அன்பிற்கே சாவு என்றால் அகிலம் என்னாவது?
என்னுயிரே வந்துவிடு ஏங்கி நாம் தவிக்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!