யாழ். அனலைதீவைப்பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னம்மா கந்தையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும்
ஆறாத்துயரில் தவிக்கின்றோம்
ஆயிரம் உறவுகள் இருந்து என்ன
உன்னைப்போல் அன்பு காட்ட
ஆறுதல் கூறிட யாரும் இல்லை அம்மா..
எம்மை தனித்து தவிக்கவிட்டு
ஏன் அம்மா சென்றாய்?
பிள்ளைகள் தான் உலகம்
என்று வாழ்ந்தாயே அம்மா
தனியாளாய் நின்று எம்மை வளர்த்தாயே
நாங்கள் வளர்ந்து உன்னை பார்க்கும் வேளையில்
எம்மை அழவிட்டு சென்றதேனோ?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்...
Our heartfelt condolences. May your mother rest in peace!