5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Colindale ஐ வசிப்பிடமாகவும் கொண்டடிருந்த சின்னத்துரை இராமலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அனுதினமும் அகம் விட்டகலா
நினைவின் வண்ணங்கள்
ஆண்டுகள் ஐந்து அகன்றாலும்
அகலாத எம் எண்ணங்கள்
இன்று போல் நினைப்பு உம் கைபட்ட
என் கன்னங்கள் என்றுமே மாறாது
எம் வாழ்வின் நினைவுச் சின்னங்கள்
கண்பட்டுக் கலைந்து போனது
எமது வாழ்வின் நிஜங்கள்
காணாமல் உமை மறைத்து
விதி செய்த சதிகள்
காவல் தெய்வமாய் என்றும் இருப்பதாய்
கனக்கும் எம் இதயங்கள்
உம் ஆத்ம சாந்திக்காய் வேண்டும்
ஆருயிர் மனைவி, பிள்ளைகள், பெறாமகன்
தகவல்:
அன்னலட்சுமி