யாழ். வசாவிளான் உத்தரிய மாதா கோவில் பங்கைப் பிறப்பிடமாகவும், கனடா Oshawa நகரை வதிவிடமாகவும் கொண்ட சிங்கராஜா ஜெயநாதிராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் திருப்பலி 06-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ரொரன்ரோ நேரம் (Canada) மாலை 06.30 மணியளவில் செபமாலையுடன் ஆரம்பமாகும். அமரர் சிங்கராயர் ஜெயனாதிராஜா அவர்களுக்காக 31ம் நாள் நினைவாக இத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். அனைவரையும் பங்குபற்ற அழைக்கின்றோம்.
Zoom Meeting ID
89832238845.
Password not needed
Jereen,Andrew and family please accept our deepest sympathies ! May your father rest in peace. Class of 85, St. John's College Jaffna