திருகோணமலை குச்சவெளியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Cergy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் நரேந்திரவேல் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 30-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில்(குச்சவெளி) நடைபெறும் சபிண்டிகரண கிரியை 01-05-2023 திங்கட்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து, வீட்டில் நடைபெறும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
2ம் வட்டாரம்,
வீரஞ்சோலை, குச்சவெளி,
திருக்கோணமலை.