9ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிரான் மக்ஸ்மியன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்களை இமை காப்பது போல
நாம் காத்து வந்த எம் செல்ல மகனே!
வையகத்தில் நீ வளமோடு வாழ்வாய் என
வாஞ்சையுடன் நாங்கள் கண்ட
கனா ஏராளம் அத்தனையும் நீ
கனவாக்கி எங்கு சென்றாய் ஐயா!
கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம் தானா என்று
நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?
அன்பான உன் உள்ளமதில் ஆசை மொழி
வார்த்தை இவையெல்லாம் நாம் இழந்து
தவிக்கின்றோம் நினைக்கின்ற வேளையில்
நெஞ்சம் வெடித்து தவிக்கின்றோம்
என்றும் உம் பிரிவால் வாடும்
அன்பு குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்