Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 23 NOV 1939
இறப்பு 28 JUL 2024
திரு சண்முகநாதன் ஐயம்பிள்ளை
Principal
வயது 84
திரு சண்முகநாதன் ஐயம்பிள்ளை 1939 - 2024 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் , கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் ஐயம்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

கண்ணுக்கு ஒளியாய் நெஞ்சத்தில் நினைவாய்
நிலையாய் என்றும் எங்களோடு எங்களின்
இறைவனாய்- என்றும்
எங்களை வழிநடத்த வணங்குகிறோம்.

முப்பத்தொன்று நாட்கள் போனாலும்
முப்பது நிமிடங்கள் போல் உள்ளதப்பா..!!
மறப்பதற்கு மனதிலும் இழப்பதற்கு
இதயத்திலும் வைக்கவில்லையப்பா
உயிராய் வைத்திருக்கின்றோம்..!!

நாட்கள் எத்தனை போனாலும்
பாசப்பிணைப்பினால் நாம் பலரும்
தவிக்கின்றோம் இல்லத்தின்
சுடரொளியாய் வையத்தில் வாழ்ந்த

உங்கள் அன்புள்ள ஆத்மாவின்
சாந்திக்காய் வேண்டுகின்றோம்!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், நாங்கள் கடினமாக இருந்த வேலையில் எங்களுக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். துயரமுற்றிருக்கும் தருணத்தில் உணவு, கோப்பி, தேநீர் போன்றவற்றை பரிமாறிய உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியை எங்கள் குடும்ப சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.

எங்கள் துயரில் கலந்து கொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அமரர் சண்முகநாதன் ஐயம்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தை நினைவு கூறும் மதிய போசனத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நடைபெறும் இடம்:
Royal King Event Centre
181 Rexdale Blvd, Etobicoke, ON M9W 1R2,
Canada

As we grieve the loss of our beloved one we would like to take this time to thank all the relatives, friends, neighbours and people who have been helpful and supportive during this difficult time. We deeply appreciate the flowers, wreath and sympathy we have received and all the condolence messages sent whether that be in person, through phone calls, emails and social media. We thank you for sharing your kind words through memories and stories and the whole family appreciates the support during this time. On behalf of our family, we would like to express our sincere gratitude to those who have provided food, coffee, tea, etc. during this time of grief. 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.