Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பூவுலகில் 23 JUL 1966
விண்ணுலகில் 17 JUN 2024
அமரர் சண்முகநாதன் ஸ்கந்தகுமார் (குமார்)
வயது 57
அமரர் சண்முகநாதன் ஸ்கந்தகுமார் 1966 - 2024 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திதி: 07-07-2025

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Bussolengo வை வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகநாதன் ஸ்கந்தகுமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று சென்றதப்பா
ஆண்டவன் திருவடியை நீங்கள் சென்றடைந்து..
ஆறாத துயரத்தை எமக்களித்து,
எமைவிட்டு பிரிந்து ஆண்டு ஒன்று ஆனதப்பா..

காலமெல்லாம் கண்ணை இமைகாப்பது
போல் எமை காத்து,குறையின்றி வாழ துணைநின்று,
கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில்
எமை விட்டு பிரிந்து ஓராண்டு ஓடிமறையுதப்பா..

நாம் மட்டும் என்று எண்ணாமல் உற்றார் உறவினர்
என அனைவரும் நலம் வாழ வழிகாட்டி
அரவணைத்த உங்கள் நல்லுள்ளம் நாமறிவோம்,
எம் உறவெல்லாம் உங்கள் நினைவாலே
வாடுதப்பா கண்களில் நீர் வழிய..என்றும்
எமை விட்டு அழியாத சொத்தாக உங்கள்
நினைவுகள் எம்மோடு கூடி ஓடுதப்பா..

கனவிலும் இழக்க முடியாத உறவு என் உள்ளத்தில்
என்றும் மறையாத உருவமப்பா.
வலியில்லா நினைவாய் வாழ மறுக்கிறது உள்ளம்,
எம்மோடுநீங்கள் இல்லாத வலி
அதுவே மனம் விட்டு மறைந்திடுமோ..
சோகம் எதுவென்று சுமைகள் யாதென்று
அறியவிடாது, எமை தாங்கி நின்ற
என் அன்புத் துணையே, எமை
தவிக்க விட்டு நீ மறைந்து
ஓராண்டு என்ன ஓராயிரம் ஆண்டுகள்
ஆனாலும் எமை விட்டு உங்கள்
நினைவுகள் மறையாது வாழும்.....
ஓம் சாந்தி..

தகவல்: குடும்பத்தினர்

Photos