
சாந்தியடையுங்கள் சரசக்கா!!!! சிரித்த முகத்துக்குச் சொந்தக்காரியே! சாந்தமான பேச்சின் பந்தக்காரியே! சிரிக்கச் சிரிக்கப் பேசியே உறவுகளின் சிந்தையில் இடம் பிடித்த நாயகியே ! * மாமாவின் பேச்சுக்கு ஒருபோதுமே மறுபேச்சுப் பேசிடாது வாழ்ந்து காட்டியே, மணாளனே மங்கையின் வழிகாட்டி எனும் மந்திரப்படி வாழ்ந்து முடித்த தாயவளே! * பிள்ளைகள் எல்லோரையும் தன்னுயராகவும் பிரியமான தோழமையோடும் கையாண்டுமே, பிக்கள் பிடுங்கல்களை தவிர்த்து-நற்குடும்பம் பிசகிடாது காத்து நின்ற சுமை தாங்கியே ! * கையில் எப்போதும் கதைப்புத்தகத்தோடும் வாயில் முப்பொழுதும் வெற்றிலையோடும், வஞ்சகம் ஏதுமின்றி வாழ்க்கையை அழகாய், வாழ்ந்து முடித்த கலைமகள் சரஸ்வதித்தாயே! * மக்களை நல்ல உயிர் நட்புறவாகவும், தமது மருமக்களை தனது சொந்த பிள்ளைகளாகவும், மதித்து வாழ்ந்து -வாழ்க்கையிலே மாபெரும், மாண்பினைப் பெற்ற தலைவியான தாயே !! * தாராள மனம் என்னும் நற்குணத்தையும், தனக்கு கிடைத்தவற்றை மற்றவர்களோடு தாராளமாகவே பகிர்ந்திடும் நற்பண்பையும், தனது கணவரிடம் தான் கற்றிருப்பாரோ? * எங்கள் வாழ்க்கையில் நாங்கள் சந்தித்த நல்ல உள்ளம் கொண்ட உறவுகளே ! சண்முகலிங்கம் மாமா சரசக்கா மற்றும் அவர்கள் குடும்பம் ,அது எங்கள் குடும்பமே!!! == அருள்பிரகாசம் குடும்பம்