10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பள்ளிமடு இராசையா சண்முகலிங்கம்
(பிரபல வர்த்தகர்- மகாலட்சுமி ஸ்டோர்ஸ், முன்னாள் கிராமசங்கத்தலைவர்- மாங்குளம்)
வயது 69
அமரர் பள்ளிமடு இராசையா சண்முகலிங்கம்
1946 -
2015
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:04/10/2025
யாழ். புங்குடுதீவு கிழக்கு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு அழுத்மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா சண்முகலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் சிகரமே
வாழ்வின் ஒளிவிளக்கே
எம் குடும்பத்தலைவனே!
எம் வாழ்வின் வழிகாட்டிய தீபமே!
ஆண்டு பத்தாகியும்
எங்களால் ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால்
வடியும் கண்ணீரும் காயவில்லை
பாசமழை பொழிந்து
நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ
வழியதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டு சென்றதெங்கே?
பத்து வருடம் ஆகியும் பத்து நிமிடம்
கூட உங்களை மறக்க முடிய வில்லை
எத்தனை உறவுகள் பல வந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்கள்
மனதை விட்டு விலகாது.
உங்கள் ஆத்மா சாந்திக்காக
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
மகன்: Kannan (Boykannan), மருமகள்: கவிதா, பேரப்பிள்ளைகள்: சந்தீப், சபீதா, சபீசன்.