1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செயபாலசிங்கம் ஆறுமுகம்
வயது 56
Tribute
4
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். மருதங்கேணியைப் பிறப்பிடமாகவும், மருதங்கேணி, இத்தாலி Palermo ஆகிய இடங்களை வதிவிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செயபாலசிங்கம் ஆறுமுகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 09-07-2022
ஆண்டு ஒன்று கடந்ததப்பா
ஆலமரம் ஒன்று வீழ்ந்ததப்பா...
பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க
முடியாத உயிரும்
எல்லாமே
உன் அன்பு மட்டுமே!
உள்ளத்தில் பல கனவு
ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும்
காலம் வரும் முன்னே
கண்மூடி மறைவாய்
என்று
கனவிலும் நினைக்கவில்லை!
ஆறுதலை இனி யார் தருவார்
கடவுள் தந்த வரமே
எங்கள் தந்தையே!
என்றும் உன் நினைவுகள்
சுமந்து
உன் வழியில்
உன் பிள்ளைகள்
நாம்
என்றும் பயணிப்போம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்