Clicky

பிறப்பு 12 SEP 1942
இறப்பு 30 APR 2021
அமரர் சேதுகாவலர் இராசவல்லவன் 1942 - 2021 சுன்னாகம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Dr. Sriranganathan Darshanan 30 MAY 2021 Sri Lanka

என் மாமாவின் அந்தியொட்டி நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமையை மனம் எண்ணித் தவிக்கின்றது. தான் படித்துத் தனது திறமையை நிலை நாட்ட வேண்டிய வயதில், தன்னைச் சார்ந்திருந்த, தனது அப்பா (எனது தாத்தா) தன்னிடம் விட்டுச் சென்ற குடும்பத்துக்காகத் தன்னை அர்ப்பணித்து, தனது உயர்வைப் புறந்தள்ளி, தனது குடும்பத்தின் ஒவ்வொருவரையும் ஆளாக்கி அழகு பார்த்திருந்த பெருமகன் எனது மாமா. என் மாமா என்னைத் தனது சயிக்கிள் பாரில் வைத்துப் பாடசாலைக்கு அழைத்துச் சென்று விட்டு விட்டுத் தனது பணிக்குச் செல்வதுண்டு. அடிக்கடி அவர் சிவப்புக் கோட்டுக்குக் கீழே கையொப்பம் இடுவதற்கு நான் காரணமாகி விடுவதுண்டு. அப்போது கூட, என்னைப் பார்த்துப் புன்னகைத்தவாறே, எனது அம்மாவிடம் (தனது தங்கையிடம்) தனியாகச் சென்று மெதுவாகத் தனக்கு நேரமாகி விட்டதை உணர்த்துவார். அந்த வயதில் எனக்குப்பெரிதாகத் தெரியாத அவரின் வலியும், பொறுமையின் உயர்வும், யாழ். பல்கலைக்கழகத்தில் எனது உத்தியோகத்தர்களுக்குச் சிவப்புக் கோடு வரைந்த போது அவர்கள் பட்ட மன வேதனையிலிருந்து தெரிந்தது. தனது கல்விப் புலமையாலும், திறமையாலும் பல மாணவர்களை ஆளாக்கிப் பெருமை சேர்த்தவர் எனது மாமா. சமுகத்துக்கும், குடும்பத்துக்கும் செய்ய வேண்டிய அனைத்தையும் திருப்திகரமாகச் செய்து அமரராகிய அவரின் இறுதி நாள், அவரது நேர்த்தியான வாழ்வை எடுத்துக் காட்டும். தானும் வருந்தாமல், எவரையும் வருத்தாமல் இறைவனடி தளுவிய உன்னத மனிதர் என் மாமா. அவ்வாறானதொரு இறுதி நாளே நாம் அனைவரும் இறைவனிடம் வேண்டி வைத்திருக்கும் மிகப் பெரும் பாக்கியம் ஆகும்!!!