செந்தமிழன் ஐயாவின் ஆத்மா இறை சாந்தியடைய பிரார்திகின்றேன். அனைத்து உயிர்களுக்குமான அரசியல் என்ற தத்துவத்தை முழங்கி உலக தமிழர்களின் உள்ளத்தில் அரசியல் ஆசானாக விளங்கும் சீமான் எனும் பெரும் புரட்சியாளனை படைத்திட்ட மா மனிதன் ஐயா செந்தமிழன் இவ் உலகில் இருந்து விடை பெற்றுள்ளார். தமிழின் வரலாற்றில் அழியா பதிவை பெற்றிட்ட சீமான் என்ற பெரும் அணையா நெருப்பை படைத்திட்ட தந்தையே நிம்மதியுடன் ஓய்வு எடுப்பீர்களாக . இவ் உலகை நீங்கள் பிரிந்து சென்றாலும் இவ் உலகம் உள்ளவரை இன்று மட்டும் அல்ல நாளைய தமிழின வரலாறும் உங்கள் பெயரையும் சேர்த்து தான் பேசிகொண்டிருக்கும். ஐயா செந்தமிழனின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் நாம் தமிழர் உடன் பிறப்புக்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம் . ஓம் சாந்தி சாந்தி சாந்தி நரேன் குடும்பத்தினர்