1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வரத்தினம் மதியழகன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் இலக்கணமாய் பாசத்தின் பெட்டகமாய்
கண் இமைபோல் எம்மைக் காத்து நின்ற தெய்வமே!
விண்ணகம் நீர் சென்றதேனோ? கண்களில் நீர் சுமந்தோம்
எண்ணத்திலே உயர்ந்தவரே! சிரித்த முகம் என்று காண்போம்?
தியாகத் திரியாகி எமைக் காத்த குல விளக்கே!
பண்புநிறை அரவணைப்பை எப்படி மறந்திடுவோம்?
உங்களது திடீர் பிரிவால் இன்றும் தத்தளிக்கின்றோமே!
ஓராண்டென்ன? ஓராயிரம் ஆண்டானாலும் உம் நினைவே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
மனைவி, பிள்ளைகள், உறவினர்கள்