Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 10 FEB 1947
மறைவு 21 FEB 2021
அமரர் செல்வரத்தினம் பாக்கியம்
வயது 74
அமரர் செல்வரத்தினம் பாக்கியம் 1947 - 2021 கணுக்கேணி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் பாக்கியம் அவர்கள் 21-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கந்தையா பார்வதி தம்பதிகளின் பாசமிகு மகளும், காங்கேசு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்வரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயவதனி(ஆசிரியை- வற்றாப்பளை மகா வித்தியாலயம்), ஜெயலதன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பொன்ராஜ்(ஆசிரியர்- முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி), ஈராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,

துவாரகன், கம்ஷா, ஓவியா, சுபிட்சன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

ஜெனுசன், அரவிந், சனா ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கனுக்கேணி மேற்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கற்பூரப்புல்வெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices