Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அன்னை மடியில் 15 OCT 1924
இறைவன் அடியில் 14 SEP 2024
திருமதி செல்வமலர் சிவஞானசுந்தரம்
வயது 99
திருமதி செல்வமலர் சிவஞானசுந்தரம் 1924 - 2024 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட செல்வமலர் சிவஞானசுந்தரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அரவனைக்கும் அன்னையாய்
வழி நடத்தும் தந்தையாய்
நல்வழிகாட்டும் ஆசானாய்
நெறிப்ப்டுத்தும் தெய்வமாய்
பண்பிற்கோர் இலக்கணமாய்
வந்த இடர் அனைத்தும்
துச்சமென ஒதுக்கி
எம்மை வாழவைத்த
பாசத் தெய்வமே!
நீர் நீங்கா நினைவுகள் பல தந்து
நீண்ட தூரம் சென்றதேன்
உம் பிரிவுத் துயர் தாளாது
அம்மா என அழுதிட்டாலும்
மாண்டவர் நீர் வந்திடுவீரோ?
வீழும் கண்ணீரைத்தான் துடைத்திடுவீரோ?
எங்கள் பாசத் தாயே, உயிர் கொடுத்த அன்பே
எத்தனை யுகங்கள் கழிந்திட்டாலும்
உங்கள் பாசமுகம் மறந்திடுமோ?
நம் நெஞ்சை விட்டு அகன்றிடுமோ?
அம்மா....
உங்கள் ஆதமா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 27-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 17 Sep, 2024