யாழ். கொக்குவில் கிழக்கு நாமகள் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை வரதராஜன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை நிகழ்வு 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் இல. 37, இராமநாதன் வீதி (கலட்டி - நாச்சிமார் கோயில் அருகாமையில்) அமைந்துள்ள A1 ராஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
நாமகள் ஒழுங்கை,
பொற்பதி வீதி,
கொக்குவில் கிழக்கு.
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.