2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லத்துரை ரூபன்
(சிங்கார ரூபன்)
வயது 46
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Saarbrücken ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை ரூபன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
இளைய மகளாகவும்,மகனாகவும் பிறந்த
தாய், தந்தையருக்கு மூத்த முத்தாக தலைமகனாகப்
பிறந்த தவப்புதல்வனே!!
உன் மழலைப் பேச்சைக்
கேட்டுத்தான் உன் தம்பிமாரும்
தங்கையும் வாய்பேச ஆரம்பித்தனர்
உன் கைகளைப் பிடித்தே
உன் தம்பிகளும், தங்கையும்
நடை பயின்றனர்
மற்றவர்களுக்கு ஏதும் பிரச்சினை
என்றால் உன் பிரச்சினை போல் முன்னின்று
முடிந்தளவு உதவிகளைச் செய்வாயே!!
அடுத்தவர்களின் தாய், தந்தை, சகோதரர்களையும் ஏனைய
உறவுகளையும் உன் வீட்டார் போலவே
பாசத்தைக் காட்டுவாயே!!
நாடு வேறு வீடு வேறு என்று பிரித்துப்
பார்க்காமல் சிரித்த முகத்துடன் வாழ்ந்து ஏன் விரைவாகவே
மறைந்து சென்றாய்
உனது மகத்தான ஆத்மா சாந்தியடையட்டும்
சாந்தி..சாந்தி..சாந்தி..
தகவல்:
குடும்பத்தினர்
I will always remember you my dear friend Ruban. regards Chandrakumaran.