கிளிநொச்சி பூநகரி மட்டுவில் நாட்டைப் பிறப்பிடமாகவும், தம்புறுவளை பிள்ளையார் கோவிலடி தும்பளை, பருத்தித்துறையை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை மகாலிங்கம் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
திரு செல்லத்துரை மகாலிங்கம் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 16-01-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 05.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெறும். அந்நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து அன்னாரது இல்லத்தில் மு.ப 11.30 மணியளவில் நடைபெறும் சபிண்டீகரண நிகழ்விலும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
பிள்ளையார் கோவிலடி,
தும்பளை,
பருத்தித்துறை.