2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லர் நல்லதம்பி நவரத்தினசிங்கம்
ஓய்வுபெற்ற எழுதுனர், விவசாயி திணைக்களம், அன்னை தாகசாந்தி மணிமண்டபம் நயினாதீவு- நிறுவனர் -2020
வயது 80
Tribute
10
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
நயீனாதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் KKS வீதி சிவலிங்கப்புளியடியை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லர் நல்லதம்பி நவரத்தினசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி
ஆண்டுகள் இரண்டு ஆன போதிலும் நீங்களின்றிய
துயரங்கள் இன்னும் ஆறவில்லை அப்பா!!
எம்மை படைத்த எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!
இரண்டு வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும் ஏதோ ஓரிடத்தில் உங்களின் ஞாபகம்
அப்பா மீண்டும் வரமாட்டாரா என ஏங்குவோம் நாங்கள்!
வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் ஐயா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!.
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest sympathy in our thoughts and prayers, Loving memories last forever.