Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 04 APR 1931
மறைவு 27 FEB 2023
அமரர் செல்லப்பா கந்தசாமி
ஓய்வுபெற்ற ஆசிரியர்
வயது 91
அமரர் செல்லப்பா கந்தசாமி 1931 - 2023 யாழ் சுதுமலை கிழக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். சுதுமலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா கந்தசாமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நாட்கள் 31 ஆனாலும்
 எங்களை விட்டு அகலாது
உங்கள் நினைவுகள் அப்பா
நினைவுகள் வரும்போத
 நிலைகுலைந்து போகின்றோம்
அப்பா உங்களை நினைக்காத
நொடிகலில்லை அப்பா

உங்களையே உலகமென உறுதியாய்
 நாமிருக்க ஏன் விண்ணுலகம்
 நிரந்தரமாய் விரைந்தீரோ?
 பூங்காவாய் நீரே இருந்தீர்
 பறவையாய்ப் பறந்துவிட்டீர்
 பூக்களெல்லாம் வாடிவிட்டோம்
 பூமுகத்தை தேடுகின்றோம்.

எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
 உங்கள் நினைவு எமை விட்டு
 அகலாது நாங்கள் உங்களை
 மறந்தால் தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான்
கண்முன்னே வாழ்ந்த காலம்
 கனவாகிப் போனாலும் எம்முன்னே
 உங்கள் முகம் எந்நாளும்
உயிர் வாழும் அப்பா!
இரவும் பகலும் உங்கள்
முகம் இதயம் வலிக்கிறது அப்பா...

மறுபடியும் உங்களைப்
பார்க்க மாட்டோமா என ஏங்கித்
தவிக்கிறோம் அப்பா...

ஓயாது உங்கள் நினைவு வந்து
 வந்து எதிர்கொள்ள ஒவ்வொரு
 கணமும் துடிதுடிக்க
உயிரோடு வாழ்கின்றோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்