3ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். ஆதிமயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கு வீரபத்திரர் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லம்மா பொண்ணுத்துரை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை மூன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
காலங்கள் கடந்தாலும் உங்கள் நினைவுகள்
எம்முடன் என்றும் வாழ்ந்து கொண்டேயிருக்கும்!!
உங்கள் ஆத்மாவிற்காக நாங்கள் வணங்குகிறோம்!!
தகவல்:
குடும்பத்தினர்