
யாழ். காரைநகர் கரப்பிட்டியந்தனையைப் பிறப்பிடமாகவும், பாலாவோடை மற்றும் கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா நடராசா அவர்கள் 16-01-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மகளும், வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற A.V நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
வில்வராஜா, பாலாம்பிகை, நவரத்தினராஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவரூபி, கணநாதன், நந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கஜரூபன், திவாகரன், கஜானன், மயூரா ஆகியோரின் பேத்தியும்,
காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, சண்முகம், பேரம்பலம், சின்னம்மா, நாகம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சோமசுந்தரம், ஆறுமுகம், மயில்வாகனம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08.00 மணிமுதல் பொரளை ஜெயரத்தின மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மு.ப 10.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12.00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
ஆழ்ந்த இரங்கல் அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம் சந்திரன் குடும்பம் (C.T.B) Vavuniya