
திதி: 26-04-2025
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநோச்சி இராமநாதபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா சோமசுந்தரம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஏழு ஆனாலும் மனம் ஆற மறுக்கிறது
சிரித்த முகத்தோடும் செயற்திறன் தன்னோடும்
செம்மையாய் வாழ்ந்த அப்பா!
அப்பா ஆயிரம் உறவுகள் கிடைத்தாலும்
உங்கள் உறவு போல் பெற முடியாது.
அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால்
மீண்டும் எமக்கு அப்பாவாக வரவேண்டும்.
நீங்கள் கூறிச் சென்ற வார்த்தைகள்
என்றும்
ஒலித்துக் கொண்டு இருக்கும் எம் அப்பாவே!
ஆண்டு ஏழு கடந்தாலும் ஆறிடுமோ
உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணி போல் எம்மைக் காத்த
அன்புத் தெய்வமே ஆறிடுமோ
எங்கள் துயரம் விதித்ததோர் விதியதால் விண்ணகம்
சென்றதைப் பொறுத்திட முடியுமோ தான்?
அப்பா, உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
பாசத்தின் பிறப்பிடமாய் பாரினிலே !
நேசத்துடன் எங்களை ஆளாக்கி
நேர்மையுடன் வாழ்ந்தீர்களே அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.