1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் சீனிவாசகம் இராமலிங்கம்
1944 -
2020
கொக்குவில், Sri Lanka
Sri Lanka
Tribute
36
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சீனிவாசகம் இராமலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவலைகள் எங்களின் இதய தெய்வமே
ஓராண்டுகள் சென்றாலும் - உம்
நினைவுகள் எம்மை விட்டு நீங்கவில்லை
என்றும் எங்களுடன் இதயத்தில் வாழ்கின்றீர்
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே
எண்ணிய பொழுதெல்லாம்
கண்ணில் நீர் கசிகிறதே
உணர்வால் உள்ளத்தால்
வாழும் தெய்வமாகி
ஒளியாகி எமக்கெல்லாம் வழியாகி
எம் இதயங்களில் வாழ்கின்றீர்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்