Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 MAR 1943
இறப்பு 30 JAN 2020
அமரர் சீனி நாகமணி
ஓய்வுபெற்ற தபால் ஊழியர் நேரியகுளம்
வயது 76
அமரர் சீனி நாகமணி 1943 - 2020 வவுனியா, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

வவுனியா அடப்பன் குளத்தைப் பிறப்பிடமாகவும், நேரியகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சீனி நாகமணி அவர்கள் 30-01-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சீனி, தங்கநாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பித்துரை, இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுந்தரலட்சுமிதேவி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,

மஞ்சுளாதேவி(அதிபர்- கணேசபுரம் விநாயகர் வித்தியாலயம், வவுனியா), கமலநாதன், தயாபரன்(வவுனியா), டயானந்தன், சிறீதரன், காலஞ்சென்ற கேதீஸ்வரன், கிருபாகரன்(ஆசிரியர்- வவுனியா புளியங்குளம் ஆரம்ப பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திருவருள்நேசன்(உதவி கல்விப்பணிப்பாளர் முறைசாரா கல்விப்பிரிவு வவுனியா), மஞ்சுளா, ஜெயவதனி, கலைவாணி, சியாமளா, நிர்த்திகா(வீதி அபிவிருத்தி அதிகாரசபை, வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை, இலட்சுமி, காலஞ்சென்றவர்களான நடராஜா, சுப்பிரமணியம், முத்துப்பிள்ளை, இராசமாணிக்கம் மற்றும் தெய்வானை, சிவபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, யோகம்மா, தங்கராசா, குலசேகரம்பிள்ளை, கணேசமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டனுசன், சஜீசன், அபிசா, ஆரணி, அகல்யா, கிரிசாந்தி, ஜீவிர்த்திகா, கஜன், கபிசா, ஆருசா, கிருசா, சொஃபி, அலக்சியா, டிலான் ஜெசிக்கா, துஷேரா, ஹர்சன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நேரியகுளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 26 Feb, 2020