

அவர் நம் அனைவராலும் நேசிக்கப்பட்டவர், அவர் நம் நினைவுகளில் என்றென்றும் போற்றப்படுவார். நாங்கள் உங்களுக்காக எப்போதும் இருக்கிறோம். நீங்கள் தனியாக இருப்பதை ஒருபோதும் உணர வேண்டாம், நாங்கள் அனைவரும் உங்களுக்காக இருக்கிறோம். இந்த கடினமான நேரத்தை கடந்து செல்ல கடவுள் உங்களுக்கு உதவட்டும். நீங்களும், உங்கள் குடும்பமும் எம் இதயத்திலும் மனதிலும் இருக்கிறீர்கள். இதோ! "ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்". எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும். மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? கிறிஸ்துவுக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.
May your Rest in peace our dearest mother. Our heart felt condolences to the grieving family. With deepest sympathies from Joseph Queena, Shano and Ravi family.God bless you all.