யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி இல. 136 ஆறுமுகம் வீதியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சவரிமுத்து சின்னத்தம்பி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உழைப்பால் உயர்ந்தவரே
ஊரார்களின் உள்ளத்தில்
இன்றும் இருப்பவரே..
பிள்ளைகள் எதிர்காலத்தை
நல்வழியில் சிறப்பாக்கிய தந்தையே..
கறுத்த உருவம்
கள்ளம் கபடமற்ற சிரிப்பு
வெள்ளை உள்ளம்
வசீகரிக்கும் பேச்சு
நேர்மையான செயல்
வயோதிபத்திலும்
உழைப்பின் உச்சம்
விவசாயத்தின் தோழன்
குழந்தைகளின் நண்பன்
எல்லோரையும்வரவேற்கும் மாண்பு
அனைவருடனும் அன்புறவாடும் திறமை
ஊரார்களின் அன்புக்குரிய 'மாதா' ஐயா..
எங்கள் வழிகாட்டியான பிதாவே...
உங்களை இழந்து ஓராண்டு சென்றாலும்
ஆற்றமுடியாத துயரத்துடன்
உங்கள் நினைவுகளுடன்
தொடர்ந்து பயணிக்கின்றோம்.
அப்பாவின் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.........
மனைவி, பிள்ளைகள், நண்பர்கள்