திதி: 13-10-2023
ஜேர்மனி Hagen ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த சதுஷன் செல்வராஜா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்மூடித்திறக்கும் முன்னே
ஓராண்டு வந்தந்துவே!
வாழ்ந்த கதை முடியுமுன்னே
நீ வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும்
உன் நிலவு முகம் தேயாதடா!
மகனே என்று உனை அழைக்க
அவனியில் நீ இல்லை- எனினும்
அலைமோதும் நினைவுதனில்
அழியாமல் நீ இருப்பாய்...
நீ வளமோடு வாழ்வாய் என வாஞ்சையுடன்
நாங்கள் கண்ட கனவு ஏராளம்!
கண்மூடி விழிப்பதற்குள் கணப் பொழுதினில்
நடந்தவைகள் நிஜம் தானா என்று நினைக்கும்
முன்னே மறைந்தது ஏனோ!
பூப் போன்ற உன் அழகு முகத்தை
புகைப்படமாய் வைத்து
நித்தம் அழுகின்றோம்!
உதிர்ந்து நீ போனாலும்
உருக்கும் உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும்!
உன் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்!!!!