மாமி மறைந்த நினைவுகள் மறக்க முன்பே மைந்தனும் மறைந்ததேனோ மறக்க முடியாத துன்பத்தோடு கூடிப்பிறந்தார் ஐவரும் உடன் பிறவாச் சகோதரிகள் இருவரும் கலங்கி நிற்கின்றனரே எங்கள் உடன் பிறப்பெங்கே என்று மீளாத்துயில் கொண்ட தம்பி ,அண்ணன் திரும்பி வராத இடம் சென்று விட்டார் என்று ஏங்கித் தவிக்கின்றனர் என் செய்வோம், காலனின் கணக்கைக் கண்டறிவார் யாரோ உங்களின் இழப்பால் துயருற்றிருக்கும் மனைவி பிள்ளைகள் உடன்பிறப்புக்கள், உற்றார் உறவினர்கள்,நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு உங்களின் ஆத்மா அன்னை முத்துமாரியின் பாதார விந்தங்களை அடையப் பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி ஓம்சாந்தி ஓம் சாந்தி🌹🌹🌹🌹🌹 ஶ்ரீதரன் அண்ணன்,பாக்கியலெட்சுமி் மச்சாள் 3ம்வட்டாரம் புங்குடுதீவு யேர்மனி