யாழ். காரைநகர் பாலாவோடை அம்பிளாவைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி மகேஸ்வரன் அவர்களின் இறுதிகிரியை நன்றி நவிலல், 31ம் நாள் ஆத்மசாந்தி பிரார்த்தனை மற்றும் நினைவுமலர் வெளியீடு.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் அன்னாருக்கு தீக்காயம் ஏற்பட்ட போது அவரை வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற முச்சர வாகன சாரதிக்கும் மேலும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவுமலர் வெளியீடு 27-12-2021 திங்கட்கிழமை அன்று திக்கரை களபூமி இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெறும்.
Prayers and fond memories are what we have to remember our dearly departed. My most heartfelt condolences. Y Arunthathy Yogenthiran Vilanai Karainagar