Clicky

45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 15 MAY 1967
இறப்பு 24 JUL 2024
அமரர் சறோசாதேவி பஞ்சநாதன்
வயது 57
அமரர் சறோசாதேவி பஞ்சநாதன் 1967 - 2024 Vathirayan, Sri Lanka Sri Lanka
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். தாழையடி வத்திராயன் வடக்கைப் பிறப்பிடமாகவும், யாழ். தும்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட சறோசாதேவி பஞ்சநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அமரர் பஞ்சநாதன் சரோசாதேவி அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் 06-09-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 06.00 மணியளவில் தும்பளை முத்துமாரி அம்மன் கோவில் அந்தியேட்டி மடத்தில் நடைபெறும். அந்நிகழ்விலும், தொடர்ந்து எமது இல்லத்தில் மு.ப 11.00 மணியளவில் நடைபெறும் சபிண்டீகரண நிகழ்விலும், ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

வீட்டு முகவரி:
முருகன் கோவில் வீதி,
தும்பளை, பருத்தித்துறை. 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 25 Jul, 2024