Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 08 DEC 1949
இறப்பு 25 APR 2024
திரு சரவணபவன் கந்தையாபிள்ளை
வயது 74
திரு சரவணபவன் கந்தையாபிள்ளை 1949 - 2024 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணபவன் கந்தையாபிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

இன்றோடு 31 நாட்கள்ஆனதுவே
நீங்கள் இல்லை 
 நினைக்கையில் வியக்கின்றேன்
 நிஜமாய் நான் வாழ்ந்தேனா?

 நினைவுகள் வருகையிலே
நிலைகுலைந்து போகின்றோம்
 காணும் காட்சிகளில்
 கண்முன்னே நிற்கின்றீர்!

 அன்பாய் அப்பா என்று
 அழைத்திட யாருண்டு?
வேதனையை சொல்லிவிட
வார்த்தைகள் இல்லை
 மீண்டும் நீ வாரும் அப்பா!

 வாழ்ந்திட இவ்வுலகில் நீ
வரும் காலம் வரும் என எண்ணி
 வாழ்கின்றோம்...!

 உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 29 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.