Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 25 OCT 1947
மறைவு 18 MAY 2024
திரு சரவணமுத்து தவகுணராஜசிங்கம்
ஓய்வு பெற்ற விரிவுரையாளர், சட்டத்தரணி, சமாதான நீதவான்
வயது 76
திரு சரவணமுத்து தவகுணராஜசிங்கம் 1947 - 2024 சுழிபுரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து தவகுணராஜசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அப்பா காலங்கள் பல சென்றாலும்
கனவெல்லாம் கண்ணீர் சொரிய
கண்கள் நீரில் மூழ்க
கண்டது எல்லாம் உம் நினைவாக
 துடிக்கும் உம் உறவுகளின் புலம்பல் இது! 
எமக்கு எல்லாம் ஆதரவு தந்த
எம் தந்தையே!
ஒரு மாதம் சென்றாலும்
எம் நினைவே உருவாகி உள்ளீர்!
இனி எப்போது எமக்களிப்பீர் உம் தரிசனம்!
எமை எல்லாம் தாங்கிப் பிடித்த
வழிகாட்டியே நீர் இப்பிறவி அல்ல
 எப்பிறவியிலும் எமக்கு தந்தையாக வேண்டும்!
என இறைவனை மன்றாடுகின்றோம்! 
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 17-06-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் திருவடிநிலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் அதனைத் தொடர்ந்து மதியம் 12.00 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெற இருப்பதனால், அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், தொடர்ந்து நடைபெறும் மதியபோசன விருந்துபசாரத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

முகவரி:
25 சந்தை வீதி,
சுழிபுரம் கிழக்கு,
சுழிபுரம். 

இங்ஙனம், குடுமப்த்தினர்
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.