Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 12 MAY 1922
மறைவு 14 DEC 2021
அமரர் சரவணமுத்து பாக்கியலட்சுமி
வயது 99
அமரர் சரவணமுத்து பாக்கியலட்சுமி 1922 - 2021 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரம் செல்வநாயகம் வீதியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை மடிப்பாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து பாக்கியலட்சுமி அவர்கள் 14-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமணி, அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

கமலேஸ்வரி(இந்தியா), விவேகானந்தன்(லண்டன்), விபுலானந்தன்(லண்டன்), யோகநாதன்(ஜேர்மனி), காலஞ்சென்ற விமலானந்தன்(அப்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பாலச்சந்திரன், புனிதரேகா, அமிர்தகெளரி, ஜெகதீஸ்வரி, மாலினிதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரசன்னா, பிரவீனா- தினேஷ், பிரியதர்சினி- சுஜிதன், வினோத்- ஷாலினி, விஜித்- சுஜிதா, விஜய், விதுரா, வித்யா, வினோஜா- ரவிசங்கர், சரண்யா- நந்தன், ரக்‌ஷனா, மயூரி- லக்தீபன், கஸ்தூரி-குமரன், கஜானன், விதுஷா- நிசாந்தன், வினுஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தியா, கவின், ஆரத்யா, விர்ஷன், அக்‌ஷயா,ஆரியன், ஆதிஷயன், திசானி ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான சதாசிவம், சீதாலட்சுமி, நடேஸ் மற்றும் இராசயோகம், மனோரஞ்சிதம், பரமேஸ்வரி, கதிர்காமநாதன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

காலஞ்சென்ற லெட்சுமி, பொன்னம்மா, இரத்தினபூபதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இல. 70, ஆயிரம் தெரு, மடிப்பாக்கம், சென்னை - 600091 எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் புழுதிவாக்கம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கமலேஸ்வரி - மகள்
விவேகானந்தன் - மகன்
விபுலானந்தன் - மகன்
யோகநாதன்(யோகன்) - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices