Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மண்ணில் 15 SEP 1945
விண்ணில் 11 SEP 2021
அமரர் சரவணபவன் பூரணம் 1945 - 2021 குமுழமுனை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முல்லைத்தீவு குமுழமுனையைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணபவன் பூரணம் அவர்களின் 31ம்நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.

அம்மா பூவைப்போல் மென்மையான உன் இதயத்தால் எம்மை அடைகாத்து உதிரத்தை பாலாக்கி, பாசத்தில் தாலாட்டி பல இரவுகள் தூக்கத்தை தொலைத்து நமக்காகவே வாழ்ந்த எங்கள் அன்பு அம்மாவே....
அன்பு, அக்கறை, பாசம், நேசம், தியாகம் என எல்லா உணர்வுகளையும் நாங்கள் உங்களிடத்தில் கண்டோம் எங்கள் அன்பு அம்மாவே ....
பொன் தன் தரத்தை இழந்து நின்றாலும் உங்கள் அன்பின் தரம் ஒருபோதும் குறைந்தது இல்லை எங்கள் அன்பு அம்மாவே.. நீங்கள் காட்டிய அளவுகடந்த பாசம், சுயநலமில்லா கள்ளங்கபடமற்ற பேச்சு இன்னும் எங்கள் நெஞ்சம் விட்டு நீங்கவில்லையே அம்மா...
ஆயிரம் உறவுகள் எங்களுடன் இருந்தாலும், உங்கள் அன்பிற்கும் பாசத்திற்கும் ஈடாகுமோ அம்மா....
நீங்கள் இல்லாமல் நாட்கள் பல கடந்தாலும் எங்கள் மீது நீங்கள் காட்டிய அளவில்லாத பாசத்தை நினைத்து நினைத்து எங்கள் கண்களில் கண்ணீர் கடல் பெருகுதம்மா.....
எம் முகம் தெரியாமல், எம் நிறம் தெரியாமல், எம் குணம் தெரியாமல் மாதங்கள் பத்து கருவறையில் சுமந்த எம் அன்பு அம்மாவே...
பாசத்தில் எங்களை சுமந்து பெற்ற எம் அம்மாவே எங்களை விட்டு பாதியிலே சென்றதேனோ...
பாசத்தால் எங்களை வளர்த்தீர்களே எங்கள் அம்மாவே ..... அன்பின் அழகே... பாசத்தின் இருப்பிடமே...
வன்சொற்களை உங்களிடமிருந்து கேட்டதில்லையே...
கடவுள் ஒரு வரம் தருவேராயானால் உங்களையே எம் தாயாய் மறுபிறப்பிலும் கேட்டிடுவோம்...
கனவுகளோடும் உம் நினைவுகளோடும் கண்ணீரோடும் ஏங்கி ஏங்கி காத்திருக்கிறோம் அம்மாவே.. 

எல்லோருக்கும் நன்றி

எங்கள் தாயாரின் நோய்க்காலத்தின்போதும், சாவீட்டிலும், இறுதிக்கிரியைகளிலும் பற்பலர் கலந்து கொண்டு ஆறுதல் செய்தார்கள் ஆதலால் பலருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
இறுதி நிகழ்வில் கலந்து கொண்டோருக்கும் - உணவு, தேநீர் தந்து எம் துயரில் இணைந்தவர்கட்கும், இரவுகளில் எம்முடன் சேர்ந்து இழவுகாத்தவர்களுக்கும் புலம்பெயர்ந்து இருக்கும் சுவிஸ் மற்றும் லண்டனில் உள்ள பிள்ளைகளின் வீட்டிற்கு நேரில் வந்து ஆறுதல் கூறியோருக்கும் மற்றும் தொலைபேசியூடாக துயரினை பகிர்ந்து கொண்டோருக்கும், மற்றும் உணவு தந்து உதவியவர்களுக்கும் வானலையூடாக ஆறுதல் செய்தவர்களுக்கும் இறுதிக்கிரியை அன்று நேரடி ஒளிபரப்பு செய்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி, பதாதைகள் ஆக்கி விநியோகித்தவர்களுக்கும் மலர்வளையம் மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், முகநூல், மின்ன ஞ்சல், WhatsApp, Viber, ROPBOOK ஊடாக இறுதிச்செய்தியை பகிர்ந்து கொண்டு, அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் - இன்றுவரை பலவழிகளிலும் உதவிகள் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எல்லோருக்கும் எமது குடும்பத்தினரின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். 

இங்ஙனம், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.