
தெங்கும் கதலியும் தேன் சுவை பனையும் நிமிர்ந்து வளர்ந்த நெடுந்தீவு மண்ணில் மூலிகை தானியம் முழுநேர வேலையாய் வேளாண்மை செய்யும் செல்லையா சேதுப்பிள்ளை பாட்டன் பூட்டிக்கு மூத்தமகளாய் முழு நிலவாக சோதியாய் தோன்றிய பேத்தி என் பேத்தியே அழகு முகமும் ஆளுமைத் தன்மையும் முத்துச்சிரிப்பும் மும்மொழிப் பேச்சும் திருக்குறள் பாடி அதன் பொருள் சொல்லி ஊரை மதித்து உறவுகளை நேசித்து பூரண அன்பு பொலிந்த அம்மம்மா சென்ற கிழமை வந்தபோதும் வருத்தமேதுமின்றி சிரித்த முகமும் செஞ்செளிப்பாகவும் சித்தர்கள் போலே துன்னிய வார்தைகள் இப்போ அதை எண்ணிய போது என் மனம் பதறுது அறிகுறி அலறல் அளைப்பு குரலேதுமின்றி் மண்ணுலகம் போதுமென்று விண்ணுலகம் சென்ற தாயே என்னவென்று நான் உரைப்பேன் யாரிடத்தில் அமைதிகொள்வேன் என்னாளும் துணை எமக்கு தாயே சரஸ்வதியே
