யாழ். இளவாலை போயிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சாந்தமரியா தாவீதுப்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டது…
ஆனால் நீங்கள் இல்லாத உண்மை
இன்னும் ஏற்க முடியவில்லை…
காலம் எல்லாவற்றையும் மாறச் செய்யும் என்பார்கள்…
ஆனால் உங்களை இழந்த வலி மட்டும் மாறவே இல்லை…
நாங்கள் பழகிக் கொண்டோம் என்று தோன்றினாலும்
உங்கள் நினைவு வந்தால் மீண்டும்
அதே வலிக்கே திரும்புகிறோம்…
சில நேரங்களில் சிரிப்போம்…
ஆனால் உள்ளுக்குள் நீங்கள் இல்லாத குறை
எப்போதும் இருக்கும்… 💔
உங்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது…
அது எங்கள் வாழ்க்கையில் என்றும்
வெற்றிடமாகவே இருக்கும்…
நீங்கள் எங்களுடன் இல்லையென்றாலும்
எங்கள் நினைவுகளிலும், நெஞ்சிலும் என்றும் வாழ்கிறீர்கள்…