யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், சுதுமலை தெற்கை வதிவிடமாகவும் கொண்ட சண்முகராசா இராசமணி அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 18-08-2023 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும் வீட்டுக்கிருத்திய நிகழ்வானது 21-08-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்திலும் நடைபெறவுள்ளது அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து, அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
மாவடி ஒழுங்கை,
சுதுமலை தெற்கு,
மானிப்பாய்.