Clicky

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
அன்னை மடியில் 10 APR 1941
இறைவன் அடியில் 21 JUL 2023
அமரர் சண்முகராசா இராசமணி
வயது 82
அமரர் சண்முகராசா இராசமணி 1941 - 2023 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், சுதுமலை தெற்கை வதிவிடமாகவும் கொண்ட சண்முகராசா இராசமணி அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 18-08-2023 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும் வீட்டுக்கிருத்திய நிகழ்வானது 21-08-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்திலும் நடைபெறவுள்ளது அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து, அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
அழியாத நினைவலைகள் எம் அடிமனதின்
ஆழத்தில் இருந்து வதைக்கிறதே அம்மா
என் செய்வோம் நாங்கள்?

காயங்கள்  ஆறிப்போகும்!
கற்பனை மாறிப்போகும்!
கனவுகள் களைந்துபோகும்
ஆனால் என்றுமே மாறாமல் இருப்பது
உன் பாசம் மட்டுமே
உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

வீட்டு முகவரி:
மாவடி ஒழுங்கை,
 சுதுமலை தெற்கு,
 மானிப்பாய்.


இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்