Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 20 NOV 1938
உதிர்வு 03 MAR 2022
அமரர் சங்கரப்பிள்ளை காமாட்சி 1938 - 2022 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்குளம், வவுனியா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சங்கரப்பிள்ளை காமாட்சி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.     

பண்பின் உறைவிடமாய் 
பாசத்தின் திருவுருவாய் 
மலர்ந்த எம் அருமைத் தாயே!

எல்லோர் மனதிலும் என்றும் 
அணையாத சுடராய் வாழ்ந்து 
கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!

அகவை நான்கு அகன்றே 
நின்றாலும் அழியாத நினைவலைகள் 
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
 வாட்டி வதைக்கின்றது அம்மா!

அன்பின் உருவான தாயே
 எம் உயிரினுள் உயிராகி உறவிலே 
கலந்து ஏற்றமுடன் நாம் வாழ 
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய 
பிரார்த்திக்கும் பிள்ளைகள், மருமக்கள், 
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்!

எங்கள் அன்புத் தெய்வத்தின் 
ஆத்மா சாந்தியடைய எல்லாம் 
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: அரசி- மகள் (France) , டிலானி, டிரோஷி, டிலானா, டொய்ஷி -பேரப்பிள்ளைகள்(France).

Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 03 Mar, 2022