Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 15 JAN 1949
மறைவு 14 SEP 2023
திருமதி சாம்பசிவசம் இந்திராணி ராசம்மா (கிளி)
வயது 74
திருமதி சாம்பசிவசம் இந்திராணி ராசம்மா 1949 - 2023 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுருவிலை புகுந்த இடமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட சாம்பசிவம் இந்திராணி ராசம்மா அவர்கள் 14-09-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற குணரத்தினம், கமலம் தம்பதிகளின் ஆசை மருமகளும்,

காலஞ்சென்ற சாம்பசிவசம் அவர்களின் என்றும் இணைபிரியா அருமை மனைவியும்,

புனிதம், ரம்பை, காலஞ்சென்றவர்களான பாலன், கிரு மற்றும் மலர், பாஸ்கரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, தேவன், சண்முகம் மற்றும் ரவீந்திரன், காலஞ்சென்றவர்களான பாலன், வவா ஆகியோரின் அண்ணியும்(தாயுமானவள்),

காலஞ்சென்றவர்களான ரகு, பரணி மற்றும் ஜீவா, உமா, உஷா, விமல், காலஞ்சென்ற கமல் ஆகியோரின் அளவு கடந்த அன்பு கொண்ட தாயாரும்,

தயா, வரதா, சந்திரன், நிஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்சன், சுபேதா, பிரகாஷ், அபி, ஸுமியன், சவுமியா, சாகித்யன், சாகித்யா, ருதுஷ், சதுஷ், தன்சா, ஹரிணி, சந்தோஷ், சமந்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ரைடன், லியன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 17-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை அவரது இல்லத்தில் (62/24 A, Weliamuna road Hendala Wattala) பார்வைக்கு வைக்கப்பட்டு, மறுநாள் 18-09-2023 திங்கட்கிழமை அன்று பொரளை A.F. Raymond மலர்ச்சாலையில் மு.ப 10:00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப. 03:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று  பின்னர் பி.ப 04:00 மணியளவில் கனத்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்