
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த றூபிகா இந்திரன் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ எம்மை விட்டு பிரிந்து
இன்றுடன் ஆண்டு ஒன்று ஆனது!
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் தான்
ஓடிப் போனாலும் அழகு ஓவியமே
எமது உயிர் உள்ளவரை உனது
அன்பு முகம் எங்கள் விழிகளில் தான்!
பூத்த நினைவது வாடுமுன்னே
பூமியை வீட்டு போனவளே
இளமையில் உயிர்பிரிந்தாய்
இதயத்தில் உறைந்து
நின்றாய் காலத்தால் எம்மைப் பிரிந்து
கண்களில் நீர் மல்க வைத்து
நாம் இங்கே தவித்து நிற்க
எம்மை விட்டுப் போனதெங்கே?
காலனின் வாழ்வோடு இணைந்து
பூலோகம் தன்னை நீ மறந்தாயோ?
மழை கூட நின்று விடும்
உன்னை நினைக்கும் போதெல்லாம்
எம் விழிகள் கண்ணீர் கடல் தான்
காலன் நம்மைக் காவு கொள்ளும் வரை
உன் நினைப்பு எம்மை
கலங்க வைத்தே தீருமம்மா..!!
எங்கள் குடும்ப ஒளிவிளக்கே
உந்தன் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி பிரார்த்திக்கின்றோம்...
Why is it that you have to go, why is life so cruel? I wish you could stay with us forever.