யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Horsens ஐ வதிவிடமாகவும் கொண்ட றொனால்டன் செபமாலை அவர்களின் நன்றி நவிழல்.
நாட்கள் பலவாகி மாதம் ஒன்றானதோ
இருதயமே உன்நினைவில்
இருண்டயுகத்தில் நாமையா!
நிழல்போல் இருந்தவன் நீ!
நினைவாய் மாறினாய்
கண் இமைக்கும் நேரத்தில்
கண்ணீர்த் துளியானாய்!
எம் இதயங்களெல்லாம் நொருங்க
இமைகளெல்லாம் நனைய
எங்களைத் தவிக்கவிட்டு
நெடுந்தூரம் சென்றதேனோ?
கண்மணியே காலனவன் ஆட்கொண்டு
நாட்கள் ஆனாலும் அழியாது உம் நினைவு
உங்கள் ஆன்மா சாந்தி பெற
கடவுளை வேண்டி நிற்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
வாழும் வயதில் வான் உலகம் சென்ற கொடுமை கேட்டு, வார்த்தை இன்றி தவிக்கின்றனர் உங்கள் குடும்பத்தினர். ஆளா துயரத்தில் வாழும் அன்னாரின் குடும்பத்தினருக்கும், அவரின் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த...