

அருள் அண்ணா! சிறு வயதிலிருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள் நாமிருவரும்.வயது சிறிது வித்தியாசமிருந்தாலும் , இருபது வயது வரை மிக நட்போடு வாழ்ந்தவர்கள் நாம். காலத்தின் கட்டாயத்தால் பிரிந்த நாம் இடையிடையே சந்தித்துக்கொள்வோம். பிரச்சனைகளால் நாட்டை விட்டே ஓடவேண்டியதாகி விட்டது. நீண்ட காலத்தின் பின் 2016க்குப் பின் ஒவ்வொரு ஆண்டும் ஈழம் வரும்போதெல்லாம் என்னை வந்து ஊரில் பார்ப்பீர்கள். ஆனால் சென்ற வருடம் என்னை வந்து சந்திக்கவில்லை. அதனால் உங்களைத் தேடி நான் அரியாலை வந்து பார்த்தேன். சிறிது சோர்வக இருந்தாலும் அன்பாக வரவேற்றீகள். இவ்வருடம் ஊர் வரும்போது சந்திக்கலாமென நம்பியிருந்தேன். நீங்கள் முந்திவிட்டீர்கள். உங்கள் ஆன்ம இளைப்பாற்ரிக்காக ஆண்டவனை வேண்டுகிறேன். உங்கள் பிள்ளைகளின் அமைதியையும் ஆசிக்கிறேன். தம்பி, மந்திரி